Saturday, December 26, 2009

புத்தகம் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது !

இன்று (25.12.09) காலை 10.30, மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டப்பத்தில் நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது.

அண்ணன் 'கேபிள்' சங்கர், நிலா ரசிகன் அவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றி.

கிறிஸ்மஸ் தினமன்று காலையில் நூல் வெளியீட்டு விழா என்றதும் கூட்டம் அவ்வளவாக இருக்காது என்று நினைத்தேன். அரங்க இருக்கைகள் நிரம்பும் அளவிற்கு கூட்டம் இருந்தது.

காந்தி வாழ்ந்த தேசம் - கவிதை நூலை, மாம்பலம். திரு.அ.சந்திரசேகர் ( நிறுவனர், சந்திரசேகர் பிலடர்ஸ்) வெளியிட திரு. டி.சுகுமார் ( உரிமையாளர், அனுஷ் பர்னீச்சர், சென்னை - 17) அவர்கள் பெற்றுக் கொண்டார்.

என்னை எழுதிய தேவதைக்கு - சிறுகதை நூலை, திருமதி. கிரிஜா ராகவன் வெளியிட கவிஞர். கார்முகிலோன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

விழா முடிவில் 'காந்தி வாழ்ந்த தேசம்' தொகுப்பு நூலில் கவிதை எழுதிய கவிஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நூலில் கவிதை எழுதிய பதிவர்கள் சான்றிதழ், புத்தகம் பெற தங்கள் முகவரியை மின்னஞ்சலில் அனுப்பவும்.

நாகரத்னா பதிப்பகத்தின் நான்கு நூல் சென்னை புத்தகக் கண் காட்சியில் இடம் பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதன் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்

Sunday, December 20, 2009

நூல்கள் வெளியீட்டு விழா

நம் உரத்தசிந்தனை சங்கம் நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு நூலும், சகுந்தலா பதிப்பகத்தின் இரண்டு நூலும் வெளியீட உள்ளது.

தலைமை : திருமதி. கிரிஜா ராகவன்(ஆசிரியர், 'லேடீஸ் ஸ்பெஷல்' மாத இதழ் )

காந்தி வாழ்ந்த தேசம் - 50 கவிஞர்கள் எழுதிய கவிதை தொகுப்பு.

வெளியிடுபவர் : மாம்பலம். திரு.அ.சந்திரசேகர் ( நிறுவனர், சந்திரசேகர் பிலடர்ஸ்)
பெறுபவர் : திரு. டி.சுகுமார் ( உரிமையாளர், அனுஷ் பர்னீச்சர், சென்னை - 17)

தொகுப்பு நூலில் கவிதை எழுதிய கவிஞர்களுக்கு திரு.ஆதி ('சிலந்தி' திரைப்பட இயக்குநர்) சான்றுகள் வழங்கவுள்ளார்.

என்னை எழுதிய தேவதைக்கு - சிறுகதை நூல்

வெளியிடுபவர் : திருமது. கிரிஜா ராகவன்
பெறுபவர் : கவிஞர். கார்முகிலோன்
தொடர்ந்து நூல் பெறுபவர் : திரு. ஜே.ரமேஷ் ( உரிமையாளர், 'Bigtop Travels')

100 ரூபாய் மதிப்புள்ள இரண்டு நூல்கள் விழா அரங்கில் ரூ.80/-க்கு கிடைக்கும்.

மழையில் குடை பிடித்துப் போகாதே ! - கவிதை நூல்

வெளியிடுபவர் : திரு. 'யார்?' கண்ணன் ( திரைப்பட இயக்குநர்)
பெறுபவர் : திரு. ஏ.எல். ஆறுமுகம் ( நிறுவனர், A.L.A.Foundation)

காற்றில் கவிதை உலா - கவிதை நூல்

வெளியிடுபவர் : திரு.நீலன் ( 'அலிபாபா' திரைப்பட இயக்குநர்)
பெறுபவர் : திரு. எம். இருளப்பன் ( நிறுவனர், D.V.M சேவா பாலம் அமைப்பு)

60 ரூபாய் மதிப்புள்ள இரண்டு நூல்கள் விழா அரங்கில் ரூ.50/-க்கு கிடைக்கும்.

2010ன் இலக்கு - கருத்தரங்கம்

பத்ரிநாத்
இதயகீதம் இராமானுஜம்
கவிஞர்.சமுரா
வழக்கறிஞர். ஜெகதீஸ்வரன்
கவிஞர். நெல்லை சுப்பையா

இடம் : சந்திரசேகர் திருமண மண்டபம்
34, லேக்வியூ சாலை,
மேற்கு மாம்பலம், சென்னை-33,
(கிட்டு பாற்க் எதிரில், போஸ்டல் காலனி அருகில் )



Wednesday, December 2, 2009

நம் உரத்தசிந்தனைக்கு வருக...!

ஒரு இலக்கிய அமைப்பு... குடும்பமாக செயல்ப்பட முடியுமா ? அப்படியே செயல்ப்பட்டால் தொடர்ந்து நிலைத்து இருக்குமா ? அப்படியே நிலைத்து இருந்து இருந்தால்.... இப்படியே பல கேள்விகள் நீண்டு கொண்டே போகலாம். அதற்கு எல்லாம் முடியும் என்று பதிலை சொல்லி, என்னால் 'நம் உரத்தசிந்தனை' ஐ எடுத்துக்காட்டாக சொல்ல முடியும்.

* 25 வருடங்களாக நம் உரத்தசிந்தனை இயக்கம் இயங்கி வருகிறது.

* 17 வருடங்களுக்கு மேல் 'நம் உரத்தசிந்தனை' தன்நம்பிக்கை மாத இதழ் வந்துக் கொண்டு இருக்கிறது.

* விசு, சிவகுமார், எஸ்.வி.சேகர், டெல்லி கணேஷ், பட்டுக்கொட்டை பிரபாகர் போன்ற பிரபலங்கள் வாழ்நாள் உறுப்பினர்களாக உள்ளனர்.

* "நல்லோர் வங்கி" என்ற குழுமத்தின் மூலம் பலருக்கு உதவி செய்துக் கொண்டு வருகிறது.

இந்த வலைப்பதிவு நம் உரத்தசிந்தனையின் நிகழ்வுகள், அறிவிப்புகள், சிறுகதை, கவிதை போட்டி என்று வெளியிட்வதற்காக தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்கள் விரைவில் வெளிவரும்....

தொடர்புக்கு :

தலைவர் : எஸ்.வி.ராஜ சேகர் (98847 28812)
பொது செயலாளர் : உதயம்ராம் ( 94440 11105)